வீண்மழை
பிச்சினிக்காடு இளங்கோ
நாம்
புகழ்ந்து புகழ்ந்து
பழக்கப்பட்டுவிட்டோம்
அதில்
நமக்குள் ஒரு போட்டி
எது எது
யார் யாருக்கு
என்பதில்
எள்ள்ளவும் இல்லை
அக்கறை
அது அதுக்குரிய
அடர்த்தியை
அறிந்திருந்தால்
விரயங்களைத் தவிர்த்திருப்போம்
வேறுபாடு தெரியாமல்
வீணாக்கக்கற்றிருக்கிறோம்
அது எப்படி
இப்படிப்
பொறுப்பின்றிப்
புகழக்கற்றுக்கொண்டோம்
அந்தக் கணத்தில்
ஆவியாகிவிடுகிறோம்
வெற்றுத்தரையில்
பெய்தமழையாய்க் கொட்டிவிடுகிறோம்
கொட்டிமுழக்குகிறோம்
மழைநீர் சேமிப்பைப்போல்
சேர்க்கத்தெரிந்திருந்தால்
செலவுசெய்ய மனமிருக்காது
யாரோ தயாரித்ததை
அடுத்தநாளே
நமதாக்கிக்கொள்கிறோம்
முகவரியில்லாமல்
அலையவிடுகிறோம்
பெற்றோரை அறியாத
அநாதைகளாய் அவை
வெட்கமில்லாமல் நாம்
பெற்றெடுத்திருந்தால் அல்லவா
வலி தெரியும்
‘கடைத்தேங்காயை
வழிப்பிள்ளையாருக்கு உடைப்பதுபோல்’
என்ற நம் பழையமொழி
நமக்கானப் பழமொழி.
பிச்சினிகாடு இளங்கோ
(12.3.15
அன்று காலையில் “நான் வீட்டுக்குப்போகவேண்டும்” என்ற தேர்ந்தெடுக்கப்பட்ட இந்திச்சிறுகதைகள் தொகுப்பில் மன்னு பண்டாரி எழுதிய ‘ஒருத்தி’ என்ற சிறுகதையைப்படித்துக்கொண்டிருந்தபோது தோன்றிய சிந்தனையை 8.15லிருந்து
8.45க்குள் எமார்ட்டியில் இருந்துகொண்டு எழுதியது. தமிழில்
No comments:
Post a Comment