Wednesday 25 May 2016

வீண்மழை



வீண்மழை

பிச்சினிக்காடு இளங்கோ


நாம்
புகழ்ந்து புகழ்ந்து
பழக்கப்பட்டுவிட்டோம்
அதில்
நமக்குள் ஒரு போட்டி

எது எது
யார் யாருக்கு
என்பதில்
எள்ள்ளவும் இல்லை
அக்கறை
 
அது அதுக்குரிய
அடர்த்தியை
அறிந்திருந்தால்
விரயங்களைத் தவிர்த்திருப்போம்

வேறுபாடு தெரியாமல்
வீணாக்கக்கற்றிருக்கிறோம்

அது எப்படி
இப்படிப்
பொறுப்பின்றிப்
புகழக்கற்றுக்கொண்டோம்

அந்தக் கணத்தில்
ஆவியாகிவிடுகிறோம்
வெற்றுத்தரையில்
பெய்தமழையாய்க் கொட்டிவிடுகிறோம்
கொட்டிமுழக்குகிறோம்

மழைநீர் சேமிப்பைப்போல்
சேர்க்கத்தெரிந்திருந்தால்
செலவுசெய்ய மனமிருக்காது

யாரோ தயாரித்ததை
அடுத்தநாளே
நமதாக்கிக்கொள்கிறோம்
முகவரியில்லாமல்
அலையவிடுகிறோம்
பெற்றோரை அறியாத
அநாதைகளாய் அவை
வெட்கமில்லாமல் நாம்


பெற்றெடுத்திருந்தால் அல்லவா
வலி தெரியும்
கடைத்தேங்காயை
வழிப்பிள்ளையாருக்கு உடைப்பதுபோல்
என்ற நம் பழையமொழி
நமக்கானப் பழமொழி.

பிச்சினிகாடு இளங்கோ
(12.3.15 அன்று காலையில்நான் வீட்டுக்குப்போகவேண்டும்என்ற தேர்ந்தெடுக்கப்பட்ட இந்திச்சிறுகதைகள் தொகுப்பில் மன்னு பண்டாரி எழுதியஒருத்திஎன்ற சிறுகதையைப்படித்துக்கொண்டிருந்தபோது தோன்றிய சிந்தனையை 8.15லிருந்து 8.45க்குள் எமார்ட்டியில் இருந்துகொண்டு எழுதியது. தமிழில்

No comments:

Post a Comment