Monday 30 December 2013

பசிமறந்துபோயிருப்போம்



பசிமறந்து போயிருப்போம்

   பிச்சினிக்காடு இளங்கோ

கடவுச்சீட்டு குடிநுழைவுஅனுமதி
ஏதுமில்லாமல்
விமானம் ஏறாமல்
எங்களூர்
ஏரிக்கு வந்திருக்கும்
பன்னாட்டுக் கவிஞர்களே
உங்களைப்பார்க்க
ஒரு சோகம் விளைகிறது

உங்களோடு
ஒரு கவியரங்கம்
நடத்தமுடியவில்லையே!
வேதனை வருத்துகிறது

உங்கள் பயணம்
எவ்வளவுத் துயரம்!
உங்கள் மனசில்
எத்துணைப் பாரம்! 

செலவுக்கு ஏதுமில்லாமல்
எவ்வளவுத்தூரம்
செலவு செய்திருக்கிறீர்கள்!

பகிந்துகொள்ள
பொது மெடையில்லையே!
பொது மொழியில்லையே!
துயரம் சுரக்கிறது!




உங்கள்
அமைதியின் அழகை  
அழகின் அமைதியை
பார்க்கப் பார்க்க
பருகப் பருக
பரவசம் பிறக்கிறது
 
ஐப்பசி கார்த்திகை
அடமழைத் திருவிழாவென்று
மடல்போட்டு உங்களை
அழைத்தது யார்?

நீரெழில் போய்த்துப்போனால்
நீங்களெல்லாம் போவதெங்கே?
ஏக்கம் குலைக்கிறது
ஏதேதோ குடைகிறது

பெட்டிப்படுக்கையின்றி
எங்கள்
பட்டிக்கிராமத்தைப் பார்க்கவந்த
நீங்கள்தான்  எங்கள்
நெற்றிப்படத்தொழும்
நேசத்துக்குரியவர்கள்

உங்கள்
கரங்களின் வலிமைக்கும்
இதயத்தின் வலிமைக்கும்
ஈடில்லை
இமயத்தின் வலிமை

இரைதேடி வருகிறீர்கள்
பாவிகளால்
இரையாகிப்போகிறீர்கள்

நீங்கள் பார்த்த
நதிகளின் அழகை
மலைகளின் எழிலை
வனங்களின் வனப்பை
காற்றின் எதிர்ப்பை
கவிதையாய்ச்சொன்னால்
காலமெல்லாம் கேட்டிருப்போம்
கண்ணுறக்கம் விட்டிருப்போம்
உங்கள் உறவுகளை
உங்களூர்ப்  பெருமைகளை
பாட்டாகப்பாடுங்கள்
பசிமறந்து போயிருப்போம்
பறவைகளே பறவைகளே
பங்காளி உறவுகளே



(‘மனம்புகும் சொற்கள்’சிற்பி எழுதிய நூலில் 31வது பக்கத்தில் கவிஞர் தேவதேவனின் கவிதை “அந்தமரக்கிளையோடு
                                ஒரு குருவிக்கூடாய்
                                அசைந்தபடி நான்
                                அமர்ந்திருந்த
                                மொட்டை மாடி” படித்துக்கொண்டிருந்தபோது 20.12.2013 அன்றி மாலை 5.31க்கு எ

அவதாரம் நான்



அவதாரம் நான்(21.12.2013)

 பிச்சினிக்காடு இளங்கோ


       
   நான் உன்
   பைத்தியம் ஆனதால்தான்
   நலமோடு வாழ்கிறேன்
   
   நாளும் பொழுதும்
   நீ மதுவாகிப்போனதால்தான்
   போதைக்கும் புகைக்கும்
   நான்  அடிமையானதில்லை

   உன்னோடு  ஓர்
   உலகம் வாய்த்ததால்தான்
   யாரோடும் எனக்கு
   பிணக்கில்லை பேதமில்லை
  
   மனம் நிறைய நீ
   நிரம்பி வழிவதால்
   மனக்குறை ஏதுமில்லை

   வருகிறவர்களெல்லாம்
   உனக்கு வணக்கம்சொல்லி
   எனக்குக் கைக்குகொடுக்கிறார்கள்
   அடிக்கடி
   உன்னைத்தான் விசாரிக்கிறார்கள்

   உன்னையும் என்னையும்
   சேர்த்தே பார்க்கிறார்கள்;
   சேர்த்தே பேசுகிறார்கள்

   உன்னிடம் பேசுவதால்
   பெருமைபெறுகிறார்கள்
   பெருமை பெறுவதற்கே
   உன்னிடம் பேசுகிறார்கள்

   உன்னை விரும்பியதால்
   எனக்கு
   ஒருகல்லில்
   ஓராயிரம் மாங்காய்கள்

   உன்னிடம்
   கரைந்துவிடுகிறேன்
   என்னிடமிருந்து
   இன்னொன்று பெறுகிறேன்
   எல்லாவற்றையும் மறந்துவிடுகிறேன்
   தனிமை எனக்கு
   வாய்த்ததில்லை
   யாரும்
   தனிமையில் என்னைப்
   பார்த்ததில்லை

   காலம் தூரம்
   கடக்கச்செய்த
   மாயம் நீ

  கவலை ஏக்கம்
  மறக்கச்செய்த
  மருந்து நீ

  வாழுந்தோறும்
  வாலிபம் வழங்கும்
  காயகல்பம் நீ

 என் வசீகரத்தின்
 அடிநாதம் நீ
 அரிதாரம் நீ
 உன்
 அவதாரம் நான்

(21.12.2013 அன்று மருமகள் சீதா சிங்கப்பூர் வந்தபோது மகன்கலைக்கோவனுடன் சென்று விமான நிலையத்திலிருந்து அழைத்துவந்து பின் வீட்டில் தூங்

Saturday 28 December 2013



     கவிதையும் கவிதையும்

     பிச்சினிக்காடு இளங்கோ

  என்கவிதை
  எளிமையானதால்
  எனக்குக்கிடைத்தது
  ஓர் அரிய கவிதை

  ஒவ்வொருநாளும்
  நான்
  கவிதை எழுதுகிறேன்

  ஒவ்வொரு நாளும்
  என்


 என்
 கவிதையைப் பேசவைத்ததுதான்
 நான்
 எழுதிய கவிதையின் சாதனை

இவ்வளவுக்கவிதைகளும்
சேர்ந்துதான்
அந்தக் கவிதையைத் தந்தது

என்
கவிதைகளின் செவிலித்தாயாய்
அந்தக் கவிதை

அது
என்
காதுகளறிந்த தேவதை
 
என்
கண்ணருகே
எத்தனையோ கவிதைகள்

என்
காதருகே
அந்த
ஒரே கவிதைதான்

கவிதைதான்
கவிதையைத்தரும்
உண்மை
உண்மையாகிவிட்டது.

(கவிதாவின் ‘சந்தியாவின் முத்தம்’ 37 வதுபக்கம் படித்துக்கொண்டிருந்தபோது எழுதிய கவிதை. நாள் 25.0

அங்குசம் காணா யானை



அங்குசம்காணா யானை (28.02.2013)

பிச்சினிக்காடு இளங்கோ

நிலைத்தது
எது என்று தெரியாவர்கள்
நினைத்தபடி
ஆடி முடித்துவிடுகிறார்கள்

தெரியாவர்கள்
தெரிந்துகொள்ள விழைந்தால்
திருந்திவிடுவார்கள்

விழையாதவர்கள்
இறுதிவரை
விளங்காதவர்களாகிவிடுகிறார்கள்

விளங்காதவர்கள்
விலங்காகும் வாய்ப்புமுண்டு

மனிதர்களோ
அடிப்படையில் சமூக விலங்குகள்

அவர்கள்
வெண்மையின் உச்சத்தை
வெளிச்சப்படுத்துகிறார்கள்

பாகன் பழக்காத
யானையாகிவிடுகிறார்கள்

அவர்களால்தான்
தீவினைகளும்
தீராக்கொடுமைகளும்

ஈடற்ற இழப்புகளை
எண்ணும்போதெல்லாம்
விலங்குகளைத்தான்
எண்ணவேண்டியிருக்கிறது

எண்ணம் விரிவடையாதவர்களை
எண்ணும்போதெல்லாம்
மனதுக்குள்
என்னமோபோல் இருக்கிறது

என்ன செய்ய..?
எல்லாம் எண்ணம்தான்