கவிதையும் கவிதையும்
பிச்சினிக்காடு இளங்கோ
என்கவிதை
எளிமையானதால்
எனக்குக்கிடைத்தது
ஓர் அரிய கவிதை
ஒவ்வொருநாளும்
நான்
கவிதை எழுதுகிறேன்
ஒவ்வொரு நாளும்
என்
என்
கவிதையைப் பேசவைத்ததுதான்
நான்
எழுதிய கவிதையின் சாதனை
இவ்வளவுக்கவிதைகளும்
சேர்ந்துதான்
அந்தக் கவிதையைத்
தந்தது
என்
கவிதைகளின்
செவிலித்தாயாய்
அந்தக் கவிதை
அது
என்
காதுகளறிந்த
தேவதை
என்
கண்ணருகே
எத்தனையோ
கவிதைகள்
என்
காதருகே
அந்த
ஒரே கவிதைதான்
கவிதைதான்
கவிதையைத்தரும்
உண்மை
உண்மையாகிவிட்டது.
No comments:
Post a Comment