Saturday 28 December 2013



     கவிதையும் கவிதையும்

     பிச்சினிக்காடு இளங்கோ

  என்கவிதை
  எளிமையானதால்
  எனக்குக்கிடைத்தது
  ஓர் அரிய கவிதை

  ஒவ்வொருநாளும்
  நான்
  கவிதை எழுதுகிறேன்

  ஒவ்வொரு நாளும்
  என்


 என்
 கவிதையைப் பேசவைத்ததுதான்
 நான்
 எழுதிய கவிதையின் சாதனை

இவ்வளவுக்கவிதைகளும்
சேர்ந்துதான்
அந்தக் கவிதையைத் தந்தது

என்
கவிதைகளின் செவிலித்தாயாய்
அந்தக் கவிதை

அது
என்
காதுகளறிந்த தேவதை
 
என்
கண்ணருகே
எத்தனையோ கவிதைகள்

என்
காதருகே
அந்த
ஒரே கவிதைதான்

கவிதைதான்
கவிதையைத்தரும்
உண்மை
உண்மையாகிவிட்டது.

(கவிதாவின் ‘சந்தியாவின் முத்தம்’ 37 வதுபக்கம் படித்துக்கொண்டிருந்தபோது எழுதிய கவிதை. நாள் 25.0

No comments:

Post a Comment