Friday 21 March 2014




          

   காலவர்மன்

பிச்சினிக்காடு இளங்கோ(சிங்கப்பூர்)

  எப்படியெல்லாம்
  வரைந்து
  வருகிறது

  எப்படியெல்லாம்
  வரைந்து
  பார்த்திருக்கிறது?

  எப்படியெல்லாம்
  வரைந்து
  தந்திருக்கிறது

  எப்படியெல்லாம்
  வரைய
  தெரிந்திருக்கிறது

  ஒப்பிட்டுப் பார்க்க
  பரிணாமம் சிரிக்கிறது
  பரிமாணம் கனக்கிறது

  மழலைச்செழிப்பை
  இளமைவனப்பை
  முதுமைக்கொடையை
  காலத்திற்கேற்ப
  வண்ணம்சேர்த்து
  வரையதெரிந்த
  ஓவியனின் பெயர்?

(ந.வீ.விசயபாரதியின் ‘தனிவழி’
 நூலைப்பார்த்த்தும் நள்ளிரவில்
 12-12.30க்குள் எழுதியது.17.03.2014