வாடிய பயிரை…
பிச்சினிக்காடு
இளங்கோ
கன்று ஈன்ற
தாய்ப்பசு இறந்ததற்கு
அப்படித்தான் அழுதாள்
அருவியாய் வீட்டுக்காரி
தயிழந்த கன்று
‘ம்மா’ என்று
கத்தும்போதெல்லாம்
கதறுகிறாள் அனிச்சையாய்
டிரான்ஸ்ஃபார்மர்( மின்னழுத்தமாற்றி)
வெடித்ததால் ஏற்பட்ட
மின்சார இழப்பில்
தோப்புகள் எங்கும்
குறும்பைகள் கொட்டும்
தென்னையைப் பார்த்தும்
வாடிப்போய் நிற்கும்
வாசல் வண்ணச்செடிகளைக் கண்டும்
கசிகிறாள் கண்களால்
சத்தியமா அவளுக்கு
வள்ளலாரையும் தெரியாது
வள்ளலார் சொன்னதை
வாய்கூசாமல் என்னைப்போல்
சொல்லவும் தெரியாது
No comments:
Post a Comment