போதாத காலம்
பிச்சினிக்காடு
இளங்கோ
இது
நடிகர்களின் காலம்
நல்ல காலமா
பொல்லாத காலமா
எதுவும்
சொல்லமுடியாத
காலம்
விழித்ததிலிருந்து
விழிமூடும்வரை
நடப்பதென்னவோ
நடிப்புத்தான்
நடிகர்களுக்காக
வாழ்கிறோம்
அல்லது
நடிகர்களாக வாழ்கிறோம்
கவிஞன் சொல்
பொய்ப்பதில்லை
சேக்ஸ்பியர் சொன்னதும்
பொய்க்கவில்லை
நடித்து மகிழலாம்
மகிழ்ச்சிக்காக நடிக்கலாம்
ஆதாயம் கருதி
அரிதாரமின்றி
நடித்தால்
வாழ்க்கையின் ஆதாரம்
சேதாரம்
எல்லா இடங்களிலுமா
பெருமூச்சு விடுவது
பொன்னுடன் செம்பு
சேர்வதுபோல் சேர்த்தால்
நகைபோல் ஒளிரும் வாழ்க்கை
இல்லையேல்
நகைப்பிற்குரியதாகும் வாழ்க்கை
(04.04.2013 அன்று மாலை 6மணியிலிருந்டு
7மணிக்குள் தமிழ்வள்ளல் நாகை தங்கராசு
அலுவலகத்தில் தஞ்சை கூத்தரசன் முன்னிலையில்
எழுதப்பட்டது)
No comments:
Post a Comment