அரசியல்
(01.02.2011 முற்கலில்
சாரு நிவேதிதா எழுதிய சீரோ டிகிரி படித்துமுடிக்கும் தருவாயில் எழுதிய கவிதை.)
பிச்சினிக்காடு இளங்கோ
எல்லா இடத்திலும்
ஓர் அரசியல்
எல்லார் இடத்திலும்
ஓர் அரசியல்
யாருக்கும் தெரியாது
என்பதே
பலம் எனக்கருதும் பரிதாபம்
தெரிந்துகொண்டவர்கள்
ரகசியமாக நடத்துகிறார்கள்
அரசியலை
அரசியலும் அரசியலும்
மோதும்போதுதான்
சொல்லிக்கொள்ளமுடியாமல்
தவிக்கிறது மனம்
அரசியலை
நடத்துவது வேறு
புரிந்துகொள்வது வேறு
என் எதிர்நோக்கி
அரசியல் வரும்போதுதான்
நான் புரிந்துகொண்ட அரசியலைப்
பயன்படுத்துகிறேன்
அதுவரை
புரிந்துகொண்டவனாகவே
கடத்துகிறேன்
அரசியலைப்
புரிந்துகொள்ளாமல் வாழ்வது
சிரமம்
அரசியல்
இல்லாத வாழ்க்கை
சுகமானது
தன்னிடமிருக்கும்
அரசியல் ஆயுதத்தை
மறைத்துக்கொள்வதில்
ஓர் அரசியல்
இருக்கிறது
அந்த ரகசியம்
அரசியல் என்பது
எனக்கு ரகசியமல்ல
வாழ்க்கையில் அரசியல்
வரும் போகும்
அரசியலை
வாழ்க்கையாகக்கொண்டவர்கள்
வாழ்கிறார்கள் என்பது
மாயை
எனக்கு
அந்த
ரகசியம் புரிகிறது
அது
எல்லா இடத்திலும்
ஓர்
அரசியல் இருக்கிறது
என்பதுதான்
No comments:
Post a Comment