Sunday 26 February 2012

நீ9ர்)தான்

நீ(ர்)தான்…. பிச்சினிக்காடு இளங்கோ 08.08.09 எப்போதும் எங்களோடு இருப்பது நீயா? இறைவனா? எப்போதும் எங்களுக்குத் தேவை நீயா? இறைவனா? எங்களை வாழவைப்பது நீயா? இறைவனா? எங்களை இயக்குவதும் எங்களுக்காக இயங்குவதும் நீயா? இறைவனா? உணவுக்கும் தொழிலுக்கும் உறுதுணை நீயா ? இறைவனா? உலகு தொழவேண்டியது உன்னையா? இறைவனையா? நீயின்றித் தெய்வம் உண்டா? தேவையா? ஐயமில்லை அய்யன் சொன்னதையே நானும் சொல்கிறேன்… “நீதான்….நீதான் நீர்தான்…நீர்தான்”

No comments:

Post a Comment