நீ(ர்)தான்….
பிச்சினிக்காடு இளங்கோ 08.08.09
எப்போதும்
எங்களோடு இருப்பது
நீயா? இறைவனா?
எப்போதும்
எங்களுக்குத் தேவை
நீயா? இறைவனா?
எங்களை வாழவைப்பது
நீயா? இறைவனா?
எங்களை இயக்குவதும்
எங்களுக்காக இயங்குவதும்
நீயா? இறைவனா?
உணவுக்கும் தொழிலுக்கும்
உறுதுணை
நீயா ? இறைவனா?
உலகு தொழவேண்டியது
உன்னையா? இறைவனையா?
நீயின்றித் தெய்வம்
உண்டா? தேவையா?
ஐயமில்லை
அய்யன் சொன்னதையே
நானும் சொல்கிறேன்…
“நீதான்….நீதான்
நீர்தான்…நீர்தான்”
No comments:
Post a Comment