நீதானா
அந்தக்குயில்
பிச்சினிக்காடு இளங்கோ
அந்த மரக்கிளையில்
அன்றாடம் அந்தக்குயில்
வாய்மொழித்தேனைத் தூவும்
கரிசனத்தோடு
காலையில் மாலையில்
இரவிலும்கூட கூவும்
அன்புக் குயிலின்
பாட்டும் பேச்சும்
சங்கீதமாகக் கரையும்
இங்கிதம் கலந்த
சங்கீதக் காற்று
எல்லா வழியிலும் தழுவும்
குதூகலம் ததும்பும்
குயில்மொழி வாசம்
சுவாசக்காற்றாய் வீசும்
எனக்காகக் குயில்
எனக்கானக் குயில்
கனவிலும் இப்போது வருகிறது
குயில்தரும் வரவால்
குயில்மொழி உறவால்
இரவும்பகலும் தொலைகிறது
குயில்கூவும்வேளை
சபைநிறைந்த ரசிகன்
கவிஞன் நான் ஒருவனே
கச்சேரி
முடிந்தாலும்
கலையாதசபையின்
கலை ரசிகனும்
நானே
தூர இருந்து
தூக்கம் கவரும்
நீதானா
அந்தக்குயில்
No comments:
Post a Comment