பிச்சினிக்காடு
இளங்கோ 08.08.09
எப்போதும்
எங்களோடு
இருப்பது
நீயா?
இறைவனா?
எப்போதும்
எங்களுக்குத்
தேவை
நீயா?
இறைவனா?
எங்களை
வாழவைப்பது
நீயா?
இறைவனா?
எங்களை
இயக்குவதும்
எங்களுக்காக
இயங்குவதும்
நீயா?
இறைவனா?
உணவுக்கும்
தொழிலுக்கும்
உறுதுணை
நீயா ?
இறைவனா?
உலகு
தொழவேண்டியது
உன்னையா?
இறைவனையா?
நீயின்றித்
தெய்வம்
உண்டா?
தேவையா?
ஐயமில்லை
அய்யன்
சொன்னதையே
நானும்
சொல்கிறேன்…
“நீதான்….நீதான்
நீர்தான்…நீர்தான்”
PICHINIKKAADU ILANGO: PICHINIKKAADU ILANGO
சொற்சிலை
ReplyDeleteபிச்சினிக்காடு இளங்கோ
செவிகளில் விழுந்த
தேன்மொழிச்சொற்கள் போதும்
உன் முகவரிசொல்ல
சொற்களில் கரையும்
உண்மையும் அன்பும்
என்னையும்
கரைக்கிறது
கல்லாயிருந்த நான்
கரைகிறேன் என்றால்
சொற்களின் வலிமைதான்
உள்ளம் வெள்ளை
சொற்களோ வெல்லம்
இணைந்த மலராய்த்
தெரிகிறாய் செவிகளில்
உன்சொல்லோடு
வருகிறதே ஒரு சுகம்
அது
உன் சுவாசம்.
அதை
எத்தனை
யுகங்களையிழந்தும் பெறுவதில்லை
உன்
கடமையும் பொறுப்பும்
ஈர்ப்பும் ஈடுபாடும்
என்னைத்
தலைவணங்கவைக்கிறது
நிமிர்ந்துபேச
என்னிடம் எதுவுமில்லை
உன்னைப்போல்
உன்னைத்தவிர
ஒரு தகுதியுமில்லை
என்னை
உயர்த்திக்கொள்ள
சரணும் ஆகலாம்
முரணும் ஆகலாம்
எனக்கென்னவோ
சரணே தரும் சாந்தியை
(03.04.2012 பிற்பகல் 3--4 மணி)
கரையாக் காகங்கள்
ReplyDeleteபிச்சினிக்காடு இளங்கோ
குரலெடுக்கத் தெரியாத
காகங்கள்
கண்ணெதிரே இருந்தும்
காணாததைக் கதைக்கும்
மனப்பிறழ்வு கேண்மைகள்
ஆரோக்கியத்தின்
தளமோ தலமோ
அல்ல அது
குன்றேறிப் பார்க்கக்
குதிக்கும்
கொதிக்கும்
இயலாமை வடிவங்கள்
அளவளாவி
ஆவிப்போகிறது
மனவழுத்தம்
மனவருத்தம் கூடி
கூவி
வெறுமையாய்க் கலைகிறது
இருளடர்ந்த வட்டத்தில்
ஒளிஒலியை
ஒருசேரப் புதைத்துவிட்டு
நடக்கிறது நாடகம்
நாளும்
(29.10.2013 அன்று மாலை 5மணிக்கு தமிழ்வள்ளல் நாகை தங்கராசு அலுவலகத்தில் எழுதியது
காதல்
ReplyDelete(13.02.2011)
பிச்சினிக்காடு இளங்கோ
காதல்
தீமிதியலில்
கண்வைக்காத நாத்திகர்கள்
இல்லை
காதல்
பொதுவுடைமைக்கட்சியில்
உறுப்பினராகாத
முதலாளிகள் இல்லை
மதம் சாதி
காதலர்களைத்
தண்டித்திருக்கலாம்
கண்டித்திருக்கலாம்
தடுக்கமுடிந்ததில்லை
காதலர்கள்
தோற்றிருக்கிறார்கள்
தோற்கடிக்கப்பட்டிருக்கிறார்கள்
காதல்
தோற்றதே இல்லை
காதல்
எல்லார்க்குமான
சமரச சன்மார்க்கம்
தேடுதுறை
கூடுதுறை
ஓடுதுறை
வாடுதுறை
பாடுதுறைதான் காதல்துறை
காதல்துறையில்
கவனம் தவிர்ப்போம்
துறைதோறும் துறைதோறும்
காதல் செய்வோம்
சிகரங்கள் தொடுவோம்
சாதனைபடைப்போம்
சரித்திரமாவோம்